Description
இந்தியாவின் இறையாண்மை நீதித் துறையின் கையில் இருக்கிறது என்பதை பல தீர்ப்புகள் எடுத்துச் சொல்லியிருக்கின்றன. அதனால்தான் சாமானியர்களும் தனக்கு ஒரு பிரச்னை என்றால் நீதிமன்றத்தை நாடுகிறார்கள். ஆனாலும் சில நீதிபதிகளால் சில தீர்ப்புகளால் நீதித் துறை மீது சற்று சலிப்பு ஏற்படுகிறது என்பதை பல சம்பவங்கள் எடுத்துக்காட்டுகளாக உள்ளன. அப்படிப்பட்ட வழக்குகள் பற்றி நீதிபதி சந்துரு விகடன் இதழ்களிலும் மற்ற இதழ்களிலும் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். பாபர் மசூதி வழக்கு போன்ற வழக்குகளில் சில நீதிபதிகள் தங்களின் தனிப்பட்ட கருத்துகளை வழக்கின்போதும் தீர்ப்புகளின்போதும் வெளியிடு கிறார்கள். அப்படி என்னென்ன வழக்குகளில் என்னென்ன நடந்தன என்பன பற்றி விளக்கி யிருக்கிறார் நீதிபதி சந்துரு. உச்ச நீதிமன்றத்திலும் உயர் நீதிமன்றங்களில் நடைபெற்ற முக்கிய வழக்குகளையும் அவற்றின் மீது வழங்கப்பட்ட தீர்ப்புகளையும் அறிந்துகொள்ளுங்கள்!
இந்த நூல் சட்டம் மற்றும் நீதித்துறை பற்றிப் பேசுவது என்றாலும், இதன் மொழி எளிமையானது. எளிமையான உதாரணங்களோடு அனைவருக்கும் புரியும் வகையில் எழுதப்பட்டிருக்கிறது.
Justice K. Chandru is a retired judge of the Madras High Court, famous for his moral rectitude. Among other things, he was one of the first judges to declare his assets to the Chief Justice; he refused to have a red beacon on his official car or a sub-inspector ranked personal security guard; he refused to be addressed as ‘My Lord’ in court; and surrendered his official car on the morning of his retirement, going home by public transport that evening. He passed many landmark judgements, many in favour of the underprivileged or marginalised sections of society.






Reviews
There are no reviews yet.